Thursday, March 22, 2012

வேதத்தை தியானித்தல் - meditation



தியானம் என்பது எமது ஆவிக்குறிய வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒரு செயலாகும் ஏனெனில் இது எமது ஆவிக்குறிய வாழ்க்கையை சீரான பாதையில் இட்டுச்செல்ல உதவுகிறது கிறிஸ்த்தவ வாழ்க்கையிலே நாம் அனேக பிரச்சினைகளுக்கும் தொல்லைகளுக்கும் சோதனைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது அத்துடன் இன்றய நவீனயுகத்திலே சிலவிடயங்கள் பாவமா அல்லவா என்பதைகூடஅறிய முடியாதுள்ளது இவற்றையும் தாண்டி ஆவியிலே அனலாயிருங்கள் என்ற வேத வார்த்தைக்கு நாம் கீழ்படியவேண்டியவர்களாயிருக்கின்றோம் அத்துடன் இயேசுவை இவ்வுலகில் பிரதிபலித்து காட்டுவதே எம்மைபற்றிய தேவசித்தமாகும் (ரோமர் 8:23)வேத வசனமே எம்மை கிறிஸ்த்துவை போலாக்குகிறது எனவே நாம் தியானிக்கிறவர்களாய் இருப்பது அவசியமாகும்

தியானம் என்றாலே அனேகருக்கு ஒரு முனிவர் தான் நினைவுக்கு வருவார் அவர் பத்மாசனமிட்டு கையில் கமண்டலத்துடன் ஏதோவொன்றை  திரும்பத்திரும்பத் சொல்லிக்கொண்டு இருக்கும் நிலையே நமக்கு ஞாபகம் வரும் எனவே நாமும் அப்படித்தான் உட்காந்து வேதத்தையும் தியானிக்க வேண்டும் என என்னிவிடுவோம் அப்படியல்ல வேதத்தை எப்படி தியானிப்பது என இனி பார்ப்போம்.

தியானம் என்பது இரைமீட்டலாகும் அல்லது அசை போடுதல் ஆகும். இன்னும் தெளிவாய் கூறினால், கவலைப்படுவதைப்போன்றதாகும். நாம் எப்படி கவலைப்படுகின்றோம்? கவலைக்குறிய விடயத்தை திரும்பத்திரும்ப யோசிக்கின்றோம் இதுவே கவலைப்படுவதாகும். இதைப்போலவே வேதப்பகுதியையும் திரும்பத்திரும் மனதில் சிந்தித்து பார்க்க வேண்டும். இதுவே தியானம் நாம் எதை அதிகமாய் சிந்திக்கின்றோமோ அதுபோலவே எமது வாழ்வுமாற்றமடையும். தியானம் எம் சிந்தை மாற்றமடைய உதவும்.

உங்களுக்குப் பொருத்தமான நேரத்தை தெரிந்தெடுங்கள்
பொருத்தமான இடத்தை தெரிந்தெடுங்கள்
கடிகாரத்தை தவிர்த்திடுங்கள்
உங்கள் தியானத்தை ஒரு ஜெபத்துடன் ஆரம்பியுங்கள்(சங்கீதம்119:18)

நீங்கள் வாசித்த வேத பகுதியின் விடயத்தை கற்பனையில் காணுங்கள்-ஒரு சம்பவமோ அல்லது உரையாடலோ அதை எப்படி நடந்திருக்கும் என கற்பனை பண்ணுங்கள்
அந்த பாத்திரம் நீங்கள் என கற்பனை பண்ணுங்கள்-சம்பவத்தில் வரும் நீங்களாயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் என யோசியுங்கள்
வேதபகுதியில் வரும் உரையாடல்கள் அறிக்கைகள் செய்தியின் சாரம்சம் என்பவற்றை உங்கள் சொந்த மொழிநடையில் சிந்தித்துப்பாருங்கள்
அத்துடன் பின்வரும் கேள்விகளை கேட்டு விடை காணுங்கள்

• இப்பகுதி அல்லது இவ்வசனம் யாரைப்பற்றி பேசுகிறது?
• இவ்வசனம் யாரால் கூறப்பட்டது?
• யாருக்கு கூறப்பட்டது?
• இவ்வசனத்தின் அன்றய அர்த்தம் என்ன?
• இவ்வசனத்தின் இன்றய அர்த்தம் என்ன?
• இவ்வசனத்தின்படி நாம் செய்யவேண்டியது என்ன?
• இவ்வசனத்தின்படி நாம் செய்யகூடாதது என்ன?
• இவ்வசனத்தின் அர்த்தம் நேரடியானதா மறைமுகமானதா?
• இப்பகுதி கவிதைவடிவானதா கதைவடிவானதா விடுகதையா பழமொழியா உவமையா அல்லது தீர்க்கத்தரிசனமா வரலாறா?

இதுபோன்ற அல்லது பொருத்தமான கேள்விகளை கேட்டு பதில் கண்டுபிடிப்பீர்களென்றால் நீங்கள் தியானம் செய்கின்றீர்கள் இன்னொன்றை எப்பொழுதுமே நினைவில் வைத்திருங்கள் வேதத்தை எப்பொழுதுமே எளிய விளங்கக் கூடிய விதத்திலேயே தேவன் தந்துள்ளார் குறிப்பிட்ட சில இடங்களைத்தவிர எப்பொழுதுமே எழுத்தின்படியே அர்த்தம் கொள்ள வேண்டும்.
ஆகவே தியானியுங்கள் இயேசுவைப்பிரதிபலியுங்கள் பிதாவின் சித்தம் நிறைவேற்றுங்கள்



No comments:

Post a Comment