கிறிஸ்த்தவ வாழ்வை மிக உற்சாகமாய் தொடங்கிய அனேகர் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இழந்து வெகுவிரைவிலேயே சாதாரண கிறிஸ்த்தவ வாழ்வு வாழ தொடங்கி விடுகின்றனர்.ஆரம்பத்தில் ஜெபித்தல், வேதம்வாசித்தல,; சாட்சிகூறுதல், சபைகூடுதல,; ஐக்கியம,; போன்ற கிறிஸ்த்தவ விழுமியங்களை மிக கண்டிப்படன் கடைப்பிடிக்கின்றனர். காலப்போக்கில் இவை ஒன்றையுமே காணமுடிவதில்லை உண்மையை சொல்லப்போனால் ஒன்று முதல் ஐந்து வருடங்களுக்குள்ளாக ஒரு பெயர் கிறிஸ்த்தவர் நிலையை அடைந்துவிடுகின்றனர.; தற்கால அனேக கிறிஸ்த்தவசபைகள் மதமாற்றம் செய்யப்பட்ட அல்லது பெயர் கிறிஸ்த்தவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவே காணப்படுகின்றன என்றாலும் உண்மை சபைகளும் பக்திவாய்ந்த அல்லது மெய்க்கிறிஸ்த்வர்களும் இல்லாமலில்லை.
ஒரு கிறிஸ்த்தவனுடைய வாழ்க்கையில் அதாவது உண்மையாய் மனந்திரும்பி பாவமன்னிப்பு நிச்சயத்தைப் பெற்றுகொண்ட மனிதனுடைய வாழ்க்கையில் பின்வாங்குதல் என்பது நடைபெறவே முடியாத ஒருசெயலாகும். இதுவே வேதாகம போதனையாகும.; (2பேதுறு 1:3-4)என்றாலும் நாம் உலகம் மாமிசம் பிசாசு என்ற மூன்று தீமைகளோடு போரிட வேண்டும் என வேதம் எமக்கு சவாலிடுகிறது. இச்சவாலில் அனேகர் தோற்றுபோய் பாரம்பரிய அல்லது உலகமயமான கிறிஸ்த்தவ வாழ்வு வாழ்ந்து வருகின்றனர் இதனால் ஆத்மீக விழிப்போடு வாழும் அல்லது கிறிஸ்த்துவுடன் நடைபோடும் வாழ்வின் வெற்றியையும் இன்பத்தையும் இழந்து சாதாரண அல்லது போலியான வாழ்க்கை வாழ்ந்து, பிரசங்கி சொல்லும் வார்த்தையை உண்மையாக்குகின்;றனர் (பிரசங்கி1:8,2:11,23)
என்றாலும் வேதம் ஆத்மீக விழிப்புள்ள வெற்றியுள்ள வாழ்வையே வாக்களிக்கின்றது. (யோவான்16;;: 33, 16: 20)அப்படியென்றால் எமது ஆத்மீக வாழ்வில் மந்தநிலை எப்படி ஏற்படுகின்றது அதனை கடந்து வெற்றியுள்ள ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கு எவைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற வினா எழலாம். பின்வரும் விடயங்களை அவதானித்து விடாமுயற்சியுடன் பின்பற்றுதல் நற்பலனைத் தரும்.
ஆத்மீக மந்தநிலை அல்லது பின்வாங்குதல் எப்படி ஏற்படுகிறது?
• மிக மெதுவாக...அல்லது படிப்படியாக ஏற்படுகின்றது
• நாம் அறியாத இன்பங்கள் எமது ஜெபத்தை வேத வாசிப்பை கொள்ளை கொள்வதால்
• ஊழியம் என்ற பெயரில் நேரம் இல்லையெனும் அளவுக்கு வேலையில் ஈடுபடுவதால்
• ஒழுங்கான அல்லது தொடர்ச்சியான சபை கூடலில் பங்குபற்றாததால்
• உலக இன்பம்,சரீர விருப்பம் பிசாசின் சோதனை என்பவற்றில் தோல்வியடையும்போது
• அறிக்கை செய்யப்படாத பாவம்-இது மனசாட்சியை மழுங்க செய்கிறது
• கிறிஸ்த்துவை அறிக்கை செய்யாமலிருத்தல்
• கிறிஸ்த்தவரல்லாத நண்பர்களுடன் மிக நெறுங்கிபழகுதல்
• மனந்திரும்பாத வாழ்க்கைத் துணையுடன் வாழுதல்
• மிஞ்சிய கேளி விளையாட்டுக்கள்
• வேத பூர்வ போதனை இல்லாமை
• உலக ஆதாயத்திற்காக இயேசுவை விசுவாசித்தல்
ஆத்மீக மந்தநிலையில் உள்ள மனிதனிடம் காணப்படும் குணங்கள் எவை?
• வேதவாசிப்பிலும் ஜெபத்திலும் விருப்பமின்மை
• கிறிஸ்த்தவ ஐக்கியத்தில் விருப்பமின்மை (2தீமோத்.4 :10)
• ஆன்மீக வாழ்வில் முன்னேர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை -ஒருகாலத்தில் இருந்திருக்கலாம் (எபிரேயர் 5:12,13)
• தேவனைச் சார்ந்துகொள்ளும் எண்ணத்தை தவிர்த்து சொந்த திட்டங்களை சார்ந்துகொள்ளல் (யாக்கோபு 4 :13)
• எப்பொழுதும் மற்றவர்களை குறை கூறுதல்( மத்:7:3)
• அவன் சந்தோசமாய் வாழ்வதில்லை (சந்தோசமாய் வாழ்ந்தால் மனந்திரும்பவில்லை என்றே அர்த்தம்)(சங்51:12, ரூத் 1:20,21)
• எதற்கும் சாட்டுப்போக்கு கூறுதல் ( மல்கியா2:17)
ஆத்மீக மந்தமடைதலின் விளைவு என்ன?
• கண்ணீர், கவலை வியாகுலத்துடன் வாழுதல்
• இறைப்பணிக்கு தகுதியற்றுப் போதல்
• நித்திய அழிவிலிருந்த தப்பினாலும் பாவத்தின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம்
ஆத்மீக மந்தநிலையிலிருப்பர் திரும்பிவர என்ன செய்ய வேண்டும்?
• தன்நிலையை சிந்தித்து உணர வேண்டும்
• பாவத்தை அறிக்கையிட வேண்டும்
• உறவுகளை சரிப்படுத்த வேண்டும்
• அநியாயமாய் பெற்றதை திரும்ப செலுத்த வேண்டும்
• விசுவாசத்தில் நிலைப்பட வேண்டும்
தன்னை நிற்கிறவனாக எண்ணுகிற எவனும் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற பவுலின் அறிவுரை எமக்கு ஒரு சவாலாகும் எனவே ஆவியில் உயிர்மீட்சியடைந்து கிறிஸ்த்துவின் பிரதிநிதிகளாய் மெய் கிறிஸ்த்தவர்களாய் வாழ்வது எமது தலையாய பொறுப்பாகும்.
Keep your good work up. May the Lord bless you!
ReplyDelete